search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் துறைகள்"

    ஆதார் கார்டை தனியார் துறைகள் ஒருபோதும் அடையாள அட்டையாக கருதக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் தீர்ப்பால் அரசு, தனியார் துறைகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். #AadhaarCard
    புதுடெல்லி:

    ஆதார் அட்டை முதலில் நடைமுறைக்கு வந்த போது ஒரு சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.

    ஆனால் பிற்காலத்தில் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உயிரி அடையாளமாக (பயோ மெட்ரிக்) ஆதார் அட்டை இருந்ததால் அது சரியான அடையாள அங்கீகாரமாக கருதப்பட்டு எல்லா துறைகளும் இதை பயன்படுத்தின.

    அரசு துறைகளில் அத்தனை அத்தியாவசிய பணிகளுக்கும் ஆதார் கார்டு அடையாள அட்டையாக கருதப்பட்டது. இதுமட்டுமல்லாமல் தனியார் துறைகளும் ஆதார் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த தொடங்கின.

    இவ்வாறு பல பணிகளுக்கும் ஆதார் கார்டு கேட்கப்பட்டதால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதன் மீது கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதில் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் தான் ஆதார் கார்டை அடையாளமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    எல்லாத்துறைகளும் அதை பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக அரசு சேவை திட்டங்களுக்கு மட்டும் அடையாள அட்டையாக ஆதார் கார்டை எடுத்துக் கொள்ளலாம். தனியார் துறைகள் ஒரு போதும் இவற்றை அடையாள அட்டையாக கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

    இதன் காரணமாக அரசின் பல துறைகளிலும், தனியார் துறைகளிலும் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாஸ்போர்ட்டு வழங்குதல், தொழிலாளர் வைப்பு நிதி, டிஜி லாக்கர் போன்ற பணிகளுக்கு ஆதார் கார்டு அடையாளமாக கருத்தப்பட்டது. இனி அவற்றை பயன்படுத்த முடியாது.

    டெலிபோன் நிறுவனங்கள் ஆதார் கார்டை தான் தங்கள் அடையாளமாக எடுத்துக்கொண்டது. அதையும் இனியும் பயன்படுத்த முடியாது. வங்கிகள், பங்குச்சந்தை வர்த்தகம் போன்றவற்றிலும் இவற்றை முக்கிய அடையாளமாக எடுத்துக் கொண்டனர். அதற்கும் தடை வந்துள்ளது.

    இது சம்பந்தமாக ஆதார் கார்டு தொடங்கப்பட்ட போது அதை உருவாக்குவதில் முக்கிய நபராக இருந்த ஏ.பி.சிங் இது பற்றி கூறும்போது, தற்போதைய டிஜிட்டல் உலகத்திற்கு தகுந்தவாறு நாம் பல மாற்றங்களை கொண்டு வந்தோம். ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து மறுபடியும் ஆட்கள் மூலம் செய்யப்படும் பேப்பர் பணிகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

    தொழிலாளர் வைப்புநிதி துறையில் 6 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் 5 கோடி பேர் வரை ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தனர். இப்போது அதிலும் கடுமையான பாதிப்பு ஏற்படும். பங்குச் சந்தை வர்த்தகமே ஆதார் கார்டை முக்கியமாக கொண்டு தான் செயல்பட்டு வந்தது. அதற்கும் கடும் பாதிப்பு ஏற்படும்.

    அதே போல பாஸ்போர்ட் துறையில் 1 கோடியே 36 லட்சம் பேர் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தனர். அதற்கும் இனி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது.

    தேர்தல் துறையில் 38 கோடி வாக்காளர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தார்கள். அதுவும் மாற்றப்பட வேண்டும். தனியார் துறைகள், வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு இது பேருதவியாக இருந்தது. இனி அவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். #AadhaarCard


    ×